Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்டுக்கட்டாக பணத்துடன் எம்.எல்.ஏ.,க்கள் கைது

ஜுலை 31, 2022 11:07

கோல்கட்டா : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் காரில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. 

இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்.எல்.ஏ.,க்கள், நேற்று மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான பணத்துடன் வருவதாக மேற்கு வங்க போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஹவுரா அருகே அவர்களது காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை எண்ணும் பணி நடந்து வருகிறது. மூன்று எம்.எல்.ஏ.,க்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்